வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சிந்தனையாளர்கள் மீதான தாக்குதல் என்பது தேசத்தின் மீதானது: முன்னாள் பிரதமர் மன்மோகன் வேதனை

இந்தியாவில் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை வெளியிடுவோர் மீதான சமீபத்திய தாக்குதல்கள் தேசத்தை கவலையடையச் செய்துள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

News image
Updated On :6 நவம்பர் 2015, 11:25 am

இந்தியாவில் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களை வெளியிடுவோர் மீதான சமீபத்திய தாக்குதல்கள் தேசத்தை கவலையடையச் செய்துள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்தநாளையொட்டி, புதுதில்லியில் நடைபெற்ற தேசிய மாநாட்டை தொடக்கிவைத்து மன்மோகன் பேசினார்.

மாற்று கருத்துகளை வெளியிடும் சிந்தனையாளர்  மீதான தாக்குதல் அல்லது அவர்கள் கொலை செய்யப்படும் சூழலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் மன்மோகன்.

இத்தகைய நிகழ்வுகளுக்கு அனைத்து நேர்மறை சிந்தனையாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இத்தகைய தாக்குதல்கள் என்பது தேசத்தின் மீதான தாக்குதல் போன்றது என்றார் மன்மோகன்.

வன்முறையாளர்களால் சமீபத்தில் நடைபெற்ற துயரமான சம்பவங்கள் அனைத்தும் கருத்து சுதந்திரம், நம்பிக்கை, பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான அப்பட்டமான தாக்குதலாகும். இந்நிகழ்வுகளால் நாடு மிகுந்த கவலையடைந்துள்ளது.

கருத்து வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளாதவர்களால் இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றார் முன்னாள் பிரதமர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.