பிகார் தேர்தல் முடிவுகள்: மோடி அரசு மீதான வாக்கெடுப்பு என கேஜரிவால் கருத்து

Updated on
1 min read

பிகார் தேர்தல் முடிவுகள் மோடி அரசு மீதான மக்களின் வாக்கெடுப்பு என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறினார்.

இந்த முடிவுகள் மத்தியில் ஆளும் பாஜக அரசின் வேலை மற்றும் அவர்களது செயல்பாடுகளுக்கு கிடைத்த மதிப்பீடு ஆகும் என்றார். மேலும், இதுபாஜகவின் தற்பெருமை மற்றும் அகந்தைக்கு சரியான சம்மட்டி அடியாகும்.

பிகார் தேர்தல் முடிவுகள் மக்கள் வெறுப்பு அரசியலை விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. இதன் மூலம் நாட்டில் நிலவும் சகிப்புத்தன்மை அற்ற நிலை நீங்கி அரசியல் ஒருங்கிணைப்பு ஏற்படும் என்றார் தில்லி முதல்வர்.

மோடி தனது வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை நிறுத்திவிட்டு, இந்திய மக்களுக்காக உழைக்க வேண்டும் என இந்திய மக்கள் விரும்புவதாகவும் கூறினார் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com