ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், ராணுவ கர்ணல் ஒருவர் இறந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வரும் பிரிவினைவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தின் 41-வது ராஷ்டீரிய ரைபிள் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையில் முன்னின்று இயங்கிய கர்ணல் சந்தோஷ்குமார் படுகாயமடைந்தார்.
குப்புவாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
குப்புவாரா மாவட்டத்தின் காட்டு பகுதியில் பிரிவினைவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து இந்த சண்டை நடைபெற்றதாக தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.