வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கரும்பு அரவைக்கான அரசின் மானியம்: விவசாயிகளுக்கு நேரடியாக வழங்க முடிவு

கரும்பு விவசாயிகளுக்கான அரவை மானியத்தை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்குவது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Updated On :18 நவம்பர் 2015, 4:38 pm

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை அதிகரித்து வரும் நிலையில் நடப்பு ஆண்டில் ஒரு குவின்டால் அரவைக்கான அரசு மானியமாக ரூ. 4.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மானியத்தை வரும் காலங்களில் அரசே நேரடியாக விவசாயிகளுக்கு வழங்குவது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.

கரும்பு அரவை ஆலையகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 21,000 கோடியாக அதிகரித்துள்ளது.  இதையடுத்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய அரவைக்கான மானியத்தை நேரடியாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு, அரவை மானியமாக குவின்டாலுக்கு ரூ. 4.50 வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அரசின் இந்த முடிவை இந்திய கரும்பு ஆலை கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.