சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பாகிஸ்தானுக்கு உளவு: எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் கைது

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உளவு பார்த்ததாக கூறி, பணியில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர் உள்ளிட்ட இருவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

Updated On :29 நவம்பர் 2015, 3:32 pm

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கு பாதுகாப்பு தகவல்களை அளித்ததாக கூறி, பணியில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர் உள்ளிட்ட இருவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் ராஜ்யோரி மாவட்டத்தைச் சேர்ந்த கபாய்துல்லா கான் என்ற மாஸ்டர் ராஜா (44) மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் நுண்ணறிவு பிரிவில் பணியாற்றும் தலைமைக் காவலர் அப்துல் ரஷீத் ஆகியோர் பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை அளித்ததாக கைது செய்யப்பட்டுள்ளாதக காவல் துறை இணை ஆணையர் ரவீந்திர யாதவ் கூறினார்.

பாகிஸ்தானுக்காக தகவல்களை சேகரித்து வந்த மாஸ்டர் ராஜாவுக்கு, எல்லைப் பாதுகாப்பு படை வீரர் அப்துல் ரஷீத் தொடர்ந்து தகவல்களை அளித்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் தில்லி போலீஸார்  தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

அதன்படி வியாழக்கிழமை, ஜம்முவிலிருந்து போபாலுக்கு சென்ற மாஸ்டர் ராஜாவை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவல் பேரில் பி.எஸ்.எப். வீரர் அப்துல் ரஷீத்தும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மாஸ்டர் ராஜாவிடமிருந்து இந்தியாவின் பாதுகாப்பு குறித்த பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொல்கத்தாவில் 3 ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் கைது

பாகிஸ்தான் நாட்டின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்ததாக கொல்கத்தாவில் மூன்று பேரை போலீஸார் இன்று கைது செய்தனர். இர்ஷத் அன்சாரி, அஸ்பக் அன்சாரி, முகமது ஜஹாங்கீர் ஆகிய மூவரையும் கொல்கத்தா ஈக்பால்பூர் பகுதியில் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் ஐந்து லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளும், பல சட்டவிரோத ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கொல்கத்தா சிறப்புப் படை பிரிவின் துணை ஆணையர் அகிலேஷ் சாருவேதி கூறினார்.

மேலும், அதில் ஒருவரிடமிருந்து ராணுவத்துக்காக போர்கப்பல்களை தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் அமைவிடம் தொடர்பான வரைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.

இந்தியர்களான மூவரும் பாகிஸ்தானுக்கு சென்று அங்குள்ள உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யிடம் பயிற்சி பெற்று வந்துள்ளது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இவர்களுக்கும் உத்திரபிரதேச மாநிலத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி முகமது இசாஷ்க்கும் தொடர்பு உள்ளதாக என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.