பணமதிப்பிழப்பு அறிவிப்பு - அனுமதிக்கு இடையே வெறும் 3 மணி நேரங்கள்
உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு குறித்து மோடி நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்புதான், இந்த நடவடிக்கைக்கு ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது.


மும்பை: உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு குறித்து மோடி நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கு 3 மணி நேரத்துக்கு முன்புதான், இந்த நடவடிக்கைக்கு ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது.
நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணியளவில், பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி, உயர் மதிப்புள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.
அந்த அறிவிப்பு வெளியாக 3 மணி நேரத்துக்கு முன்புதான், இந்த நடவடிக்கைக்கு ஆர்பிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது. அதே சமயம், இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஆர்பிஐ இயக்குநர்கள் குழுவில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பதற்கான பதில் கிடைக்கப் பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...