ஜம்மு-காஷ்மீரில் புதிய அரசு: பிரதமர் மோடியுடன்-மெஹபூபா இன்று சந்திப்பு

மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவரும், முஃப்தி முகமது சயீதின் மகளுமான மெஹபூபா முஃப்தி இன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் புதிய அரசு: பிரதமர் மோடியுடன்-மெஹபூபா இன்று சந்திப்பு
Updated on
1 min read

மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) தலைவரும், முஃப்தி முகமது சயீதின் மகளுமான மெஹபூபா முஃப்தி இன்று தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்பின் முக்கியதுவமாக பாஜகவும்-மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து மீண்டும் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்தும், மார்ச் 24-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், கடந்த வியாழக்கிழமை மெஹபூபா முஃப்தி தில்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது ஜம்மு-காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் சந்திப்பு முக்கியத்துவம் பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com