புதிய கடற்படை தளபதியாக சுனில் லன்பா பொறுப்பேற்பு

துணை அட்மிரலாக இருந்த சுனில் லன்பா புதிய கடற்படை தளபதியாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.
புதிய கடற்படை தளபதியாக சுனில் லன்பா பொறுப்பேற்பு
Updated on
1 min read

புது தில்லி: துணை அட்மிரலாக இருந்த சுனில் லன்பா புதிய கடற்படை தளபதியாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக கடற்படை தளபதியாக இருந்த ஆர்.கே தோவன் ஓய் பெற்றதை தொடர்ந்து  புதிய கடற்படை தளபதியாக சுனில் லன்பா பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய கடற்படையில் உள்ள ஒவ்வொரு பணியையும் பொறுப்புடன் சுனில் செய்து முடிப்பார் என்று நம்புகிறேன் என்று தோவன் கூறியுள்ளார்.

1957-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி பிறந்த சுனில் லன்பா, 1978-ல் இந்திய கடற்படையில் சேர்ந்தார். கடந்த 38 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் கமெண்டோ, செயல்பாட்டு மற்றும் ஊழியர்கள் நியமனங்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்த அவர், இறுதியாக கடற்படை துணை அட்மிரலாக இருந்தார்.

இந்நிலையில், தற்போது சுனில் லன்பா கடற்படை தளபதியாக இன்று பொறுப்பேற்றுள்ளார். இவர் பரம் விஷிஸ்ட் சேவா மற்றும் அட்டி விஷிஸ்ட் சேவா விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com