ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி: காஷ்மீர் எல்லையில் கடும் பீரங்கி சண்டை

இந்திய எல்லைப் பகுதி மீது இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையில் கடும் பீரங்கி சண்டை நடந்து வருகிறது.

News image
Updated On :4 அக்டோபர் 2016, 5:23 am


ஜம்மு: இந்திய எல்லைப் பகுதி மீது இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லையில் கடும் பீரங்கி சண்டை நடந்து வருகிறது.

ரஜௌரி மாவட்டம் நௌஷேரா பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீதும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இன்று அதிகாலை 5.15 மணியளவில் நௌஷேராவின் 3 பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் ஷெல்களைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்டது.

மோர்ட்டர் வெடிகுண்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கிகளைக் கொண்டும், சிறிய ரக ஆயுதங்களையும் பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பீரங்கிகளைக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்திய எல்லையை ஒட்டியுள்ள கல்சியான், ஜங்கர், மக்ரி பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.