ரவி நதியில் ஆளில்லா பாகிஸ்தான் படகு: கைப்பற்றியது பிஎஸ்எஃப்

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் அருகே பாயும் ரவி ஆற்றில் ஆளில்லாத பாகிஸ்தான் நாட்டின் படகு ஒன்றை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
Updated on
1 min read


பதான்கோட்: பஞ்சாப் மாநிலம் பதான்கோட் அருகே பாயும் ரவி ஆற்றில் ஆளில்லாத பாகிஸ்தான் நாட்டின் படகு ஒன்றை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

பாகிஸ்தான் எல்லையில் இருந்து ரவி ஆற்றில் அடித்து வரப்பட்ட பாகிஸ்தான் படகு ஒன்றை சர்வதேச எல்லைக்கு அருகே பதான்கோட்டில் கைப்பற்றியுள்ளோம் என்று எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஆளில்லாத பாகிஸ்தான் படகு ஒன்று கைப்பற்றப்பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்பினாலும், இது ஆற்றில் நீர் வரத்து அதிகரித்த காரணத்தினால் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் பாகிஸ்தானைச் சேர்ந்த 9 பேர் படகில் வந்தபோது இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com