

புது தில்லி: இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று சந்திக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சோனியா, சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி வாராணசி சென்ற 69 வயதாகும் சோனியாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்.
அதன்பிறகு ஓய்வில் இருந்த சோனியா, இன்றுதான் முதல் முறையாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் ஆனந்த் ஷர்மா ஆகியோருடன் சோனியா சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.