பீகாரில் மீண்டும் வருது மதுவிலக்கு: பாட்னா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை!

பீகாரில் நிதிஷ் குமார் அரசால் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு சட்டத்திற்கு தடைவிதித்து பாட்னா உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இன்று தடைவிதித்துள்ளது. 
பீகாரில் மீண்டும் வருது மதுவிலக்கு: பாட்னா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை!
Published on
Updated on
1 min read

பாட்னா: பீகாரில் நிதிஷ் குமார் அரசால் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு சட்டத்திற்கு தடைவிதித்து பாட்னா உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இன்று தடைவிதித்துள்ளது. 

பீகார் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, முழுமையான மதுவிலக்கை கொண்டுவருவோம் என வாக்குறுதி அளித்த நிதிஷ் குமார் தலைமையிலான மதசார்பற்ற மகா கூட்டணி ஆட்சியை பிடித்தது. வெற்றிக்குப் பின்னர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நிதிஷ்குமார் அரசு, கடந்த ஏப்ரல் மாதம் பூரண மதுவிலக்கு சட்டம் கொண்டு வந்தது.

மதுவிலக்கு சட்டத்துக்கு எதிராக மதுபான விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சில தனிநபர்கள் பீகார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு பிறப்பித்த மதுவிலக்கு அரசாணை சட்டவிரோதமானது என கூறி ரத்து செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பீகார் அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதீமன்றம் பாட்னா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதன் மூலம் பீகாரில் மீண்டும் மதுவிலக்கு அமலுக்கு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com