கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாகிஸ்தானில் பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்து: 27 பேர் பலி

பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:29 pm

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரஹிம் யார்கான் மாவட்டத்தில் கான்பூர் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கராட்சியில் இருந்து பஹவல்பூர் செல்லும் பேருந்தும், சாதிக்பாத்தில் இருந்து பைசலாபாத் வந்துகொண்டிருந்த பேருந்தும் ஒன்றோடொன்று பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 65-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.