இதற்கிடையே, அகில இந்திய தமிழ்ச் சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் இரா. முகுந்தன் தில்லியில் இருந்து ஹரித்வாருக்கு திங்கள்கிழமை இரவு சென்றுள்ளார். இது பற்றி அவர் "தினமணி' நிருபரிடம் கூறுகையில், "உத்தரகண்ட் மாநில ஆளுநர், முதல்வர், ஹரித்வார் மாவட்ட ஆட்சியர், பிரச்னை எழுப்பும் சாதுக்கள் உள்ளிட்டோரை சந்தித்து, திருவள்ளுவர் சிலையை வேறு இடத்தில் வைக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ள இருக்கிறோம். இந்த விஷயத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தமிழர்களும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்' என்றார்.