எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
தேசப் பிரிவினையை அடுத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்றவர்களின் சொத்துகளை நிர்வாகம் செய்வதற்காக எதிரி சொத்து சட்டம் கொண்டு வரப்பட்டது. குறிப்பாக 1965-ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போருக்குப் பிறகு 1968-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. சுமார் 48 ஆண்டுகள் பழைமையான இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி, பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் சொத்துகளை விற்பனை செய்ய முடியாது. எதிரி சொத்துகளை இப்போது பராமரித்து வருபவர்கள் அது தனிநபராக இருந்தாலும் சரி, அரசுத் துறையாக இருந்தாலும் சரி அவர்களே அந்தச் சொத்துகளை வைத்துக் கொள்ள முடியும் என்பது எதிரி சொத்து சட்ட திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்களாகும்.
மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த மசோதாவை மக்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். முன்னதாக, எதிரி சொத்து அவசரச் சட்டம் ஜனவரி 7-ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது நாடாளுமன்றத்தில் அதற்குரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

