103 வயது சுதந்திரப் போராட்டத் தியாகி தேசியக் கொடி ஏற்றினார்

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 103 வயது சுதந்திரப் போராட்ட தியாகி தேசியக் கொடி ஏற்றினார்.
103 வயது சுதந்திரப் போராட்டத் தியாகி தேசியக் கொடி ஏற்றினார்
Updated on
1 min read

நாடு முழுவதும் ஆக்ஸட் 15-ந் தேதி (இன்று) 71-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தின.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்தியாவின் 14-ஆவது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். 

இந்நிலையில், இந்தியாவின் 71-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தின் புருலியா மன்பஸார் என்ற இடத்தில் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 103 வயது சுதந்திரப் போராட்டத் தியாகி பிஜய் குமார் தத்தா, தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com