‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தமிழக முன்னாள் ஆளுநர் எஸ்.எஸ் பர்னாலா காலமானார்!

தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்.

News image
Updated On :14 ஜனவரி 2017, 12:21 pm

DIN

சண்டிகர்: தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருமான சுர்ஜித் சிங் பர்னாலா காலமானார்.

பஞ்சாப் மாநில முதல்வரராக இருந்தவர் சுர்ஜித் சிங் பர்னாலா. இவர் தமிழகத்தின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். 1990-1991 மற்றும் 2004-2011 ஆகிய இரண்டு காலகட்டங்களில் தமிழகத்தின் ஆளுநராக அவர் பணிபுரிந்துள்ளார்.

லக்னோவில் சட்டம் பயின்ற அவர் இந்தியாவின் விடுதலைப்போராட்டத்திலும் பங்கேற்றவராவார். வாஜ்பாய் அமைச்சரவையில் ரசாயனத்துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

உடல்நலக் குறைபாடு காரணமாக சண்டிகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை உயிரிழந்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.