பத்ம விருதுகளுக்கு இதுவரை 2,500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம்

வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த கலைஞர்கள், நிபுணர்கள், வீரர்களை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படும் பத்ம விருதுகளுக்கு 2,500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பத்ம விருதுகளுக்கு இதுவரை 2,500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம்
Updated on
1 min read


புது தில்லி: வாழ்க்கையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த கலைஞர்கள், நிபுணர்கள், வீரர்களை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படும் பத்ம விருதுகளுக்கு 2,500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் குடியரசுத் தின விழாவுக்கு முன்கூட்டி பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். 

வரும் 2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோரை தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் 30ம்தேதி வரை பத்ம விருதுகளுக்காக 2,500க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2017ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதியாகும். 

2016ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கு 18,761 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விருதுக்கான பரிந்துரைகளை மாநில  அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், அமைச்சர்கள், அரசு துறைகள் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com