நிகழாண்டில் 100 சதவீத மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

நிகழாண்டில் 100 சதவீத பருவமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிகழாண்டில் 100 சதவீத பருவமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தில்லியில் இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் கே.ஜே. ரமேஷ் கூறியதாவது:

எல்-நினோ நிலையின் தாக்கம் தற்போது குறைந்திருப்பதை வைத்து கணக்கிடும்போது, நிகழாண்டில் பருவமழை அளவு சராசரியாக இருக்கும் என்று தெரிகிறது.

இதனால் பருவமழை காலத்தில் 100 சதவீத அளவுக்கு மழை பெய்யக்கூடும். ஆஸ்திரேலிய வானிலை ஆராய்ச்சி மையமும், எல்-நினோவின் தாக்கம் நிகழாண்டில் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், பருவமழை நன்றாக பெய்யும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் ரமேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com