நிகழாண்டில் 100 சதவீத பருவமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் கே.ஜே. ரமேஷ் கூறியதாவது:
எல்-நினோ நிலையின் தாக்கம் தற்போது குறைந்திருப்பதை வைத்து கணக்கிடும்போது, நிகழாண்டில் பருவமழை அளவு சராசரியாக இருக்கும் என்று தெரிகிறது.
இதனால் பருவமழை காலத்தில் 100 சதவீத அளவுக்கு மழை பெய்யக்கூடும். ஆஸ்திரேலிய வானிலை ஆராய்ச்சி மையமும், எல்-நினோவின் தாக்கம் நிகழாண்டில் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், பருவமழை நன்றாக பெய்யும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார் ரமேஷ்.