குஜராத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டுள்ளதாக படலே் போராட்டக்குழுத் தலைவர் ஹார்திக் படேல் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நமது நிபந்தனைகளை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே விதி எண் 31 மற்றும் 46-ன் அடிப்படையில் படேல் சமூகத்துக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும் வரும் தேர்தலில் நமது போராட்டக்குழுவில் இருந்து தேர்தலில் போட்டியிடுபவர்கள் வென்றால் இதுதொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற போராடுவார்கள்.
இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ-வாக போட்டியிட வாய்ப்பு வழங்கினால் அதனை நான் ஏற்க மாட்டேன். என்னுடைய நிலைப்பாட்டில் நான் என்றும் தெளிவாக இருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே ஒன்றுதான். எனவே யாருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று நான் தெரிவிக்க மாட்டேன். அந்த தீர்ப்பை உங்களிடமே விட்டு விடுகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் அமைக்கப்படும் மினி டைடல் பாா்க் வேலைவாய்ப்பை உருவாக்கும்! - திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்

உதயநிதி முதல்வராக மாட்டாா் என ஸ்டாலின் உறுதி சொல்வாரா?

ஏப். 14 வரை வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறும் பணி

பரமக்குடியில் நெசவு நெய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


