

தனது மகள் மருத்துவ இடம் பெற்றது குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால் எதிர்கொள்ளத் தயார் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
அனிதாவை யாரோ மூளை சலவை செய்து தற்கொலைக்கு தூண்டியிருக்கிறார்கள், அதற்கான ஆதாரம் உள்ளது. சிபிஐ அல்லது மாநில அரசு அமைக்கும் விசரணை ஆணையம் முன்பு ஆதாரங்களை சமர்ப்பிப்பேன்.
இளவரசன், டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணத்தில் உள்ள சந்தேகம்தான் அனிதா மரணத்திலும் உள்ளது. தந்தை பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் இந்த காலத்துக்கு ஏற்கத்தக்கதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.