ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சாரின் மைத்துனர் மும்பை விமான நிலையத்தில் கைது

விடியோகான் குழுமத்துக்கு ஐசிஐசிஐ வங்கி ரூ.3,250 கோடி கடன் கொடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ள அதன் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) சந்தா கோச்சாரின் மைத்துனர் ராஜீவ் கோச்சார் மும்பை விமான நிலையத்தில்

Updated On :6 ஏப்ரல் 2018, 1:08 am IST

விடியோகான் குழுமத்துக்கு ஐசிஐசிஐ வங்கி ரூ.3,250 கோடி கடன் கொடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ள அதன் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) சந்தா கோச்சாரின் மைத்துனர் ராஜீவ் கோச்சார் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ராஜீவ் கோச்சார் தென்கிழக்கு ஆசிய நாட்டுக்குச் செல்வதற்காக மும்பை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தார்.
தேடும் நபராக சிபிஐ அறிவித்துள்ளதை அடுத்து, அவரை வெளிநாடு செல்ல விடாமல் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர், சிபிஐ அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர். 
கடந்த 2012-ஆம் ஆண்டில் விடியோகான் குழுமத்துக்கு ஐசிஐசிஐ கடன் வழங்கியது தொடர்பாக அந்த வங்கியின் சில அதிகாரிகளிடம் சிபிஐ ஏற்கெனவே விசாரணையை தொடங்கி விட்டது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:
அந்த நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டது தொடர்பாக பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். ஏதேனும், தவறு நேர்ந்திருக்கும் பட்சத்தில் ஐசிஐசிஐயின் மேலாண் இயக்குநராகவும் இருக்கும் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோருக்கு அதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி வைப்போம்.
முதல்கட்ட விசாரணையில் விடியோகான் குழுமத்தின் சிஇஓ வேணுகோபால் தூத், தீபக் கோச்சர் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, விடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில் சந்தா கோச்சாருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று ஐசிஐசிஐ தலைவர் எம்.கே.சர்மா தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.