

புதுதில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஒருவரிடம் சிபிஐ விசாரணையை நடத்தி உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரணையை முன்னெடுத்து வருகிறது. பல்லாண்டுகளாக நடந்து வந்த மோசடி தொடர்பான தகவல்கள் ஆர்.பி.ஐ.க்கு எப்படி தெரியாமல் போனது என்பது உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் சிபிஐயால் எழுப்பப்பட்டு வந்தது.
அதன் தொடர்ச்சியாக ஆர்.பி.ஐ. அதிகாரிகள் மூவரிடம் வியாழன் அன்று சிபிஐ விசாரணை செய்தது. இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஒருவரிடம் சிபிஐ விசாரணையை நடத்தி உள்ள தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.