உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நல்லெண்ண தூதராகவே பாகிஸ்தான் செல்கிறேன் - சித்து

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் விழாவுக்கு நல்லெண்ண தூதராகவே செல்வதாக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

புகைப்படம்: ஏஎன்ஐ

Published On :

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் விழாவுக்கு நல்லெண்ண தூதராகவே செல்வதாக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 

பாகிஸ்தான் பிரதமராக அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் இஸ்லாமாபாத்தில் சனிக்கிழமை பதவியேற்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவுக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சுனில் கவாஸ்கர் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தார். 

இந்த அழைப்பை ஏற்று நாளை நடைபெறவிருக்கும் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில்  நவ்ஜோத் சித்து பங்கேற்கிறார். இதற்காக வெள்ளிக்கிழமை பாகிஸ்தானுக்கு புறப்பட்ட சித்து அட்டாரி - வாகா எல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த ஜனநாயகத்தின் மாற்ற தருணங்கள் மிகவும் முக்கியமானவை. நண்பனாக இம்ரான் கான் எனக்கு அழைப்பு விடுத்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இது எனக்கு கௌரவான விஷயம். பாகிஸ்தானுக்கு நான் நல்லெண்ண தூதராகவே செல்கிறேன். இருநாட்டு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்பில் நான் அங்கு செல்கிறேன்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.