ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை (டிச.3) நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ஒரு ராணுவ 3 பயங்கரவாதிகள் பலியாகினர்.
சோபியான் மாவட்டத்தில் உள்ள சங்க்ரான் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர்.
அப்போது இருதரப்புக்கும் இடையே சண்டை வெடித்தது. இந்தச் சண்டையில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அங்கு தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.