ராஜஸ்தான் முதல்வராகிறார் அஷோக் கெலாட்: இன்று மாலை அறிவிப்பு
ராஜஸ்தான் மாநில முதல்வர் போட்டியில் சச்சின் பைலட்டை பின்னுக்குத் தள்ளி பதவியைப் பிடிக்க உள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அஷோக் கெலாட்.


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வர் போட்டியில் சச்சின் பைலட்டை பின்னுக்குத் தள்ளி பதவியைப் பிடிக்க உள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அஷோக் கெலாட்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மூத்தத் தலைவர்களுடனான சந்திப்பினை முடித்துவிட்ட நிலையில், இன்று மாலை ராஜஸ்தான் முதல்வர் தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளார். அப்போது, ராஜஸ்தான் மாநில முதல்வராக இரண்டு முறை பதவி வகித்த அஷோக் கெலாட் (67) புதிய முதல்வராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தான் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்த அஷோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் ராகுல் காந்தியை சந்தித்தனர். அஷோக் கெலாட், ராகுலுடன் சந்திப்பை முடித்துக் கொண்டு ஜெய்ப்பூர் திரும்பிவிட்ட பிறகு, அவரை முதல்வராக தேர்வு செய்வதாக கட்சித் தலைமை முடிவு செய்தது.
ராஜஸ்தான் முதல்வர் தேர்வு குறித்து கட்சித் தலைமை இன்று மாலை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...