தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ஆம் வகுப்பு மாணவர்

ஹரியாணாவில் உள்ள பள்ளி ஒன்றின் முதல்வரை அதே பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர் சனிக்கிழமை சுட்டுக்கொன்றுள்ளான்.

News image
Updated On :20 ஜனவரி 2018, 10:29 am

ஹரியாணாவில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தில் யமுனாநகர் உள்ளது. இங்குள்ள பள்ளி ஒன்றில் சனிக்கிழமை கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அப்பள்ளியின் முதல்வரை அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளார்.

பள்ளி முதல்வர் ரீட்டா சாபரா, தனது அலுவலகத்தில் பணிகளை மேற்கொண்டிருந்தபோது அந்த மாணவர் திடீரென உள்ளே புகுந்து சரமாரியாக சுட்டுள்ளான்.

இதையடுத்து அந்த பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர்கள் அந்த மாணவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அப்பள்ளி முதல்வர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பள்ளியில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

இந்நிலையில், அந்த மாணவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டான். அதில், அந்த மாணவன் மனஅழுத்தத்தில் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.