மகாராஷ்டிராவில் மினிபஸ் ஆற்றில் கவிழ்ந்து 12 பேர் பலி
மகாராஷ்டிராவின் கோல்காபூர் நகரில் மினிபஸ் ஒன்று ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவின் கோல்காபூர் நகரில் மினிபஸ் ஒன்று ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவின் மேற்கே கோல்காபூரில் மினிபஸ் ஒன்று 17 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை இரவு கடலோர நகரனமான ரத்னகிரிலிருந்து கோல்காபூர் நோக்கி சென்று கொண்டிருந்த மினிபஸ் இரவு 12 மணியளவில் சிவாஜி பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பஞ்சகங்கா ஆற்றுக்குள் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் இருந்து 7 பேர் மீட்கப்பட்டதாகவும் அவர்களில் 4 பேர் உயிரிழந்து விட்டனர் என தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மினிபஸ்ஸில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலனோர் புனே நகரின் பேல்வாடி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...