இந்தியா வருகிறார் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் 4 நாள் சுற்றுப்பயணமாக ஜூலை 8-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார்.
இந்தியா வருகிறார் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்
Published on
Updated on
1 min read

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் 4 நாள் சுற்றுப்பயணமாக ஜூலை 8-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். 

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில், "இந்த சுற்றுப்பயணத்தின் போது மூன் ஜே-இன், பிரதமர் மோடியுடன் இருநாடுகளுக்கு இடையிலான போர் திறன் வாய்ந்த உறவை மேலும் வலுப்படுத்த பிராந்திய, சர்வதேச மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான விவகாரங்கள் குறித்து பேசவுள்ளார்" என்றது. 

இந்த சந்திப்பின் முக்கிய குறிக்கோளாக பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேசப்படவுள்ளது. 

இந்தியாவுக்கு முதன்முதலாக வருகை தரும் மூன் ஜே-இன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்திக்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com