கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சர்வதேச மகளிர் தினத்தினை தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையம் எப்படிக் கொண்டாடப் போகுது தெரியுமா? 

சர்வதேச மகளிர் தினமான வரும் 8-ஆம் தேதி அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் முழுக்க பெண் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவது என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2018, 12:00 pm

PTI

புதுதில்லி: சர்வதேச மகளிர் தினமான வரும் 8-ஆம் தேதி அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் முழுக்க பெண் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவது என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

சர்வதேச மகளிர் தினம் வரும் 8-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அதனை சிறப்பிக்கும் பொருட்டு தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையமானது ஒரு முயற்சி எடுத்துள்ளது.

அதன்படி அன்று ஒரு நாள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச் சாவடிகளில் முழுக்க பெண் ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவது என்று முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் முக்கிய நகரங்களை ஒட்டியுள்ள ஏதேனும் ஒரு சுங்கச் சாவடியிலாவது இந்த திட்டமானது வரும் 8-ஆம் தேதியன்று செயல்படுத்தப்படும்.  தேர்ந்தெடுக்கப்படும் சாவடிகளில் அன்று பெண் ஊழியர்கள் பகல் நேரப் பணியில் மட்டும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்த முன்முயற்சியானது வெற்றியடைந்தால் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் எல்லா சுங்கச் சாவடிகளிலும் மூன்று மாதங்களுக்குள் இந்த திட்டமானது நடைமுறைபடுத்தப்படும்.

இது தொடர்பாக மண்டல அலுவலகங்களுக்கு முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.