அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிப்பு

காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களின் இடங்களுக்கான வேட்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிப்பு
Updated on
1 min read

மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கான வேட்பாளர்களை பாஜக புதன்கிழமை அறிவித்துள்ளது.

விரைவில் காலியாக உள்ள மாநிலங்களை வேட்பாளர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பாஜக சார்பில் தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ள அருண் ஜேட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் வேட்பாளர்களாக பாஜக நியமித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும், பிகார் மாநிலத்தில் இருந்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அமைச்சர்களாக உள்ள இவர்களது மாநிலங்களவை பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள காரணத்தால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பாஜக தரப்பில் ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் இருந்து ஜே.பி.நட்டா, மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து தவார்சந்த் கெலாட், ராஜஸ்தானில் இருந்து புபேந்தர் யாதவ், குஜராத்தில் இருந்து மாந்தவ்யா ரூபாலா, ஹிமாச்சலப்பிரதேசத்தில் இருந்து ஜகத்பிரதா நட்டா உள்ளிட்டோர் பாஜக தரப்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com