வங்கிகளில் தொழிலதிபர்கள் பலர் கடன் மோசடி செய்திருப்பது வெளிப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் ஒருவர் போலியாக வங்கி நடத்தி மோசடி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பலியா மாவட்டத்தின் முலாயம் நகர் பகுதியில் அண்மையில் கர்நாடகா வங்கியின் கிளை ஒன்று திறக்கப்பட்டது. இந்த வங்கியின் செயல்பாடுகள் சந்தேகத்துக்குரிய வகையில் இருந்ததை அடுத்து, அதே மாவட்டத்தில் உள்ள மற்றொரு கர்நாடகா வங்கிக் கிளையில் சிலர் இது தொடர்பாக தெரிவித்தனர். அப்போது, கோப்புகளை ஆய்வு செய்த அதிகாரிகள், அவர்கள் கூறும் இடத்தில் தங்கள் வங்கிக்கு கிளையே இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, அவர்கள் உடனடியாக வங்கியின் உயரதிகாரிகளுக்கு இது தொடர்பாக புகார் அளித்தனர். உடனடியாக பலியாவுக்கு வந்த கர்நாடகா வங்கியின் உயரதிகாரிகள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் அளித்தனர். இதையடுத்து, அந்த போலி வங்கிக் கிளைக்கு விரைந்த போலீஸார், அங்கு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வினோத் குமார் காம்ளி என்பவர், போலியாக இந்த வங்கிக் கிளையை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.
அங்கிருந்து ரூ.1.37 லட்சம் பணம், மூன்று கணினிகள், ஒரு மடிக்கணினி, இரு செல்லிடப்பேசிகள், வங்கி பாஸ்புக்குகள், பணத்தை டெபாசிட் செய்வதற்கான ரசீது உள்ளிட்ட ஏராளமான போலி ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். வினோத் குமாரின் பெயரில் போலியான ஆதார், கர்நாடகா வங்கி மேலாளர் என்ற போலியான அடையாள அட்டை என பல ஆவணங்களும்
போலீஸாரிடம் சிக்கியுள்ளது.
தன்னை வங்கி மேலாளர் என்று அப்பகுதி மக்களிடம் வினோத் குமார் காம்ளி அறிமுகப்படுத்திக் கொண்டு, பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு போலி வங்கிக் கணக்கு தொடங்கி பாஸ்புக் கொடுத்துள்ளார். மேலும், சிலரிடம் பல லட்சம் ரூபாய் வரை நிரந்தர வைப்புத் தொகையும் பெற்றுள்ளார். கைது செய்யப்பட்ட வினோத் குமாரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!

புனேவில் பயங்கரம்! 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!

உத்தமபாளையம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி!

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

