ஷோபியான்: பேருந்தில் இருந்த எந்த மாணவருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்று என்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்தேன் என்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கல்வீச்சில் பாதிக்கப்பட்ட பள்ளி பேருந்தின் ஓட்டுநர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பள்ளிப் பேருந்து மீது கல் வீச்சு நடப்பதை அறிந்ததும், உடனடியாக வேகத்தைக் கூட்டினேன். பேருந்தில் இருந்த எந்த மாணவருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்று என்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்தேன். ஆனால், ஒரு மாணவருக்கு கல்வீச்சில் காயம் ஏற்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டம், ஜவுரா பகுதியில் பள்ளி குழந்தைகள் 35 பேரை ஏற்றிக் கொண்டு தனியார் பள்ளி பேருந்து சென்றது. அப்போது அந்தப் பேருந்தின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் ரேஹன் கோர்சாய் எனும் 2ஆம் வகுப்பு மாணவன் பலத்த காயமடைந்தார். இதைத் தொடர்ந்து, அந்த மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்துக்கு முதல்வர் மெஹபூபா முஃப்தி தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்தத் தாக்குதல் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது; கோழைத்தனமான மற்றும் முட்டாள்தனமான இந்தத் தாக்குதலில் தொடர்புடையோர் நீதியின் முன்நிறுத்தி தண்டிக்கப்படுவர்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
அதிக கவனம்பெறும் தேனி வாக்குச்சாவடி! 5 பேரில் வாக்களித்தது எத்தனை பேர்?

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மீனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


