கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!23,400 புள்ளிகளை எட்டிய நிஃப்டி, சென்செக்ஸ் 304 புள்ளிகள் சரிவுகரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!இன்பதுரையின் வெற்றி செல்லாது: அப்பாவு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி: முதல்வர் விஜய்கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் டி.கே. சிவகுமார்!
/

உத்தரப்பிரதேசத்தில் கனமழை: 45 பேர் சாவு

உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :3 மே 2018, 12:11 pm IST

உத்தரப்பிரதேசத்தில் சூறாவளியுடன் கூடிய கனமழை பெய்த எதிரொலியாக அம்மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 45 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இதில், ஆக்ராவில் 36 பேர், பிஜ்நூரில் 3, சஹாரன்பூரில் 2, பரேலி, மொராதாபாத், சித்ராகோட் மற்றும் ராம்பூர் ஆகிய இடங்களில் தலா ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், பாதிப்படைந்த பகுதிகளில் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.