ஹைதராபாத்: டிசம்பரில் தேர்தலை சந்திக்கவிருக்கும் தெலங்கானாவில் நாட்டை ஆளும் பாஜக வெளியிடவிருக்கும் தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பசுக்கள் இலவசமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி இருக்கலாம்.
பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் பிரபாகர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் பசுக்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. எனவே, மக்களுக்கு இலவசமாக பசுக்களை வழங்குவது பரிசீலனையில உள்ளது என்று கூறினார்.
அடுத்த வாரத்தில் இந்த தேர்தல் அறிக்கை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்த தகவல் உறுதி செய்யப்படும்.