இந்திய அரசால் வெளிநாடு தப்பிச் சென்ற பொருளாதார குற்றவாளிகளை நாடு கடத்தி தண்டனை வழங்குவது தொடர்பாக ஜூலை மாதம் இரு அவைகளின் ஒப்புதலுடன் புதிய சட்டத்தை ஏற்படுத்தியது.
எனவே இந்த சட்டத்தின் அடிப்படையில் சமீபத்தில் இந்தியாவில் பெரும் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரூ.9 ஆயிரம் கோடி வங்கி முறைகேட்டில் ஈடுபட்டு தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் விஜய் மல்லையா மீது இச்சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய விஜய் மல்லையாவுக்கு 3 வார காலம் அவகாசம் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு

12 ராசிக்கார்களுக்குமான வார பலன்கள்!

சினிமாவில்தான் ஒரே பாட்டில் முதல்வர் ஆகலாம்.. பிரகாஷ் ராஜ் பிரசாரம்

5 போட்டிகளாக விக்கெட் எடுக்காத பும்ரா..! பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட வேண்டுமா?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


