எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

உத்தரப்பிரதேசத்தை புரட்டிப் போட்ட கன மழை: வீடுகளுக்குள் வெள்ளம் 

உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரில் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 9:17 am


லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரில் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் ஜென்மாஷ்டமி கொண்டாட முடியாமல், உத்தரப்பிரதேச மக்கள் தவித்து வருகிறார்கள்.

இன்று உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை முன்னறிவிப்புகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முற்பகல் 11 மணிக்கு கன மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

பழைய லக்னௌ பகுதிகளில் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு உத்தரப்பிரதேசத்தில் கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.