பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் அரங்கேற முடியாது என்பதால் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை இந்திய அரசு ரத்து செய்தது நல்ல முடிவு என்று ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் பேசுகையில்,
"பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் அரங்கேற முடியாது என்பது அரசின் கொள்கை. அதனால், பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இந்திய அரசின் கொள்கை தெளிவாக உள்ளது. இதனை பாகிஸ்தானுக்கு தெளிவுபடுத்திவிட்டோம்.
மற்ற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை எங்களது மண்ணில் அனுமதிக்கமாட்டோம் என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், பயங்கரவாத நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து பார்க்கிறோம், பயங்கரவாதிகள் எல்லை தாண்டி வருகின்றனர். நாங்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவில்லை என்பதை தங்களது நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் நிரூபிக்க வேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடத்தலாமா என்பதை அரசு தான் முடிவு செய்யும். பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக நடைபெறாது என்பதால் அரசு நல்ல முடிவை தான் எடுத்துள்ளது என்று எண்ணுகிறேன்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



