ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பஞ்சாப், ஹரியானா, சண்டிகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை: ரெட் அலர்ட்

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் பகுதிகளில் தொடர்ந்து 3வது நாளாக மழை பெய்து வருவதால், இம்மூன்று மாநிலங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எனப்படும் கன மழை எச்சரிக்கை விடுத்துள்து.

News image
Updated On :24 செப்டம்பர் 2018, 10:58 am


சண்டிகர்: பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் பகுதிகளில் தொடர்ந்து 3வது நாளாக மழை பெய்து வருவதால், இம்மூன்று மாநிலங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எனப்படும் கன மழை எச்சரிக்கை விடுத்துள்து.

நெற்பயிர்களும், பருத்திச் செடிகளும் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், பெய்த கன மழை காரணமாக வேளாண் பொருட்கள் அனைத்துமே வெள்ளத்தில் நாசமானதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மிதமானது முதல் கன மழை வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் பஞ்சாப் மாநிலத்தின் சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளும், ஹரியானாவில் யமுனா நதியிலும், வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அப்பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டுள்ளது. சாலைப் போக்குவரத்து கடுமையாக உயர்ந்துள்ளது. 

இது பருவம் தவறிய மழை என்றும், அறுவடை நேரத்தில் பெய்திருக்கும் கன மழை காரணமாக வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.