மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஏழை மக்களின் பணத்தை அம்பானிக்கு வழங்கிய 'காவல்கார' பிரதமர் மோடி: ராகுல் காந்தி

இந்தியாவின் ஏழை மக்கள் மற்றும் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் பணத்தை எடுத்து பிரதமர் மோடி அம்பானிக்கு வழங்கியதாக ராகுல் காந்தி திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.  

News image
Updated On :24 செப்டம்பர் 2018, 1:03 pm

இந்தியாவின் ஏழை மக்கள் மற்றும் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் பணத்தை எடுத்து பிரதமர் மோடி அம்பானிக்கு வழங்கியதாக ராகுல் காந்தி திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.  

2 நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான அமேதிக்கு திங்கள்கிழமை சென்றார். கடந்த சில நாட்களாகவே, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டி வருகிறார். 

அதன் தொடர்ச்சியாக அவர் இன்றும் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக குற்றம்சாட்டி பேசினார். இதுதொடர்பாக, அவர் பேசுகையில், 

"இந்தியாவின் காவல்காரர் ஏழை மக்கள், உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்கள் ஆகியோரது பையில் இருந்து ரூ.20,000 கோடியை எடுத்து அம்பானியின் பையில் போட்டுள்ளார்.

விமான ஒப்பந்தத்தின் விலை ஏன் வெளியிடப்படவில்லை. அம்பானிக்கு எப்படி ஒப்பந்தம் வழங்கப்பட்டது. பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஃபிரான்கோய்ஸ் ஹோலன்ட் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். 

பிரதமர் உரைகளை ஆற்றுகிறார், ஆனால் பதில் இல்லை. அவரால் எனது கண்களை பார்க்கமுடியவில்லை. பதில் தருவதற்கான தைரியம் அவரிடம் இல்லை. 

பாஜக ஆட்சியில் ஏழைகளும், விவசாயிகளும் அழுகின்றனர். அனில் அம்பானி, விஜய் மல்லையா மற்றும் லலித் மோடி உள்ளிட்டோர் அனைத்து நன்மைகளும் பெறுகின்றனர். தற்போதைய அரசு குறிப்பிட்ட ஒருசில 5 முதல் 10 பேருக்கு மட்டுமே அனைத்து நன்மையையும் செய்கிறது" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.