

புது தில்லி: கன மழை காரணமாக ஹரியானாவின் ஹத்னிகுண்ட் அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் யமுனை நதி அபாய அளவை எட்டியுள்ளது.
உத்தரகாண்ட், ஹிமாச்சல், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கன மழை காரணமாக இம்மாநிலத்தில் பாயும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
யமுனையின் அபாய அளவு என்பது 204 மீட்டராகும். தற்போது யமுனை 204.83 மீட்டர் அளவில் பாய்கிறது.
யமுனை அபாய அளவை தாண்டி பாய்வதால், தில்லியில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தில்லி தலைமைச் செயலர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
தொடர்ந்து அபாய அளவைத் தாண்டிப் பாயும் யமுனை நதியால் தில்லியில் கரையோரப் பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.