புது தில்லி: கடந்த 2017-18 ஆம் ஆண்டில் மட்டும் தேர்தல் நன்கொடையாக பாஜகரூ.1000 கோடிக்கும் அதிகமாக பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-18 ஆம் ஆண்டில் தேர்தல் நன்கொடையாக பெற்றுள்ள தொகைகள் குறித்து அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் வருமானவரித்துறை ரிட்டன் தாக்கல் செய்துள்ளன,. அதில் இருந்து தெரிய வருவதாவது:
கடந்த ஆண்டில் அதிகமான நன்கொடை வாங்கிய கட்சிகளில் ரூ.1000 கோடிக்கு மேல் பெற்று பாஜக முதலிடம் வகிக்கிறது.
பாஜக தவிர்த்து மேலும் 4 கட்சிகள் அதிகமான அளவு நன்கொடைகளைப் பெற்றுள்ளன. அவற்றில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ரூ.717 கோடி நன்கொடை பெற்றுள்ளதாக ரிட்டன் தாக்கல் செய்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 2017-18-ம் ஆண்டு ரிட்டனில் ரூ.291 கோடியாக உயர்ந்துள்ளது.
2017-18-ம் நிதியாண்டில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிதி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2017-18-ம் ஆண்டில் ரூ.104 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக ரிட்டனில் தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் ரூ.1.50 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வருமான ரிட்டன் அறிக்கையை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யவில்லை.