புது தில்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள ஜான்ஸன்ஸ் பேபி ஷாம்பு மாதிரிகளை இந்தியாவின தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்யவுள்ளது.
ராஜஸ்தானில் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய சோதனையில், நோ டியர்ஸ் என்ற விளம்பரத்துடன் வரும் குழந்தைகளுக்கான ஜான்ஸன்ஸ் ஷேம்புவில் புற்றுநோயை உருவாக்கும் ஃபார்மால்டிஹைடி எனும் ரசாயனம் கலந்திருப்பது இரண்டு வெவ்வேறு மாதிரிகளில் உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் ஷாம்பு மாதிரிகளை சேகரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஈஸ்வர ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஒருவேளை சோதனையில் சம்பந்தப்பட்ட ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக சந்தையில் இருந்து ஷாம்பு திரும்ப பெற வேண்டும் என்று உத்தரவிடப்படும் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


