மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

370 சட்டப்பிரிவு நீக்கம், ராமர் கோயில் வாக்குறுதிகளை இம்முறை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும்: சிவ சேனை

370 சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் ராமர் கோயில் ஆகியவற்றை இம்முறை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்று சிவ சேனை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :10 ஏப்ரல் 2019, 4:11 pm IST

பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ள 370 சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் ராமர் கோயில் ஆகியவற்றை இம்முறை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்று சிவ சேனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிவ சேனையின் அதிகாரப்பூர்வ சாம்னா நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில்,

பாஜக-வின் சங்கல்ப பத்திர தேர்தல் வாக்குறுதிக்கு சிவ சேனை 100-க்கு 200 மதிப்பெண்கள் அளிக்கிறது. குறிப்பாக தேசத்தின் பாதுகாப்பு மற்றும் விவசாயம் தொடர்பான திட்டங்கள் பாராட்டுக்குரியவை.

அதேவேளையில், ஜம்மு-காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கம் மற்றும் அயோத்தியில் ராமர் கோயில் அமைப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை பாஜக இம்முறை ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும்.

அப்போதுதான் 370 சட்டப்பிரிவு நீக்கத்துக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடிய ஷியாம் பிரசாத் முகர்ஜிக்கு பாஜக செலுத்தும் உரிய மரியாதையாக அமையும்.

அதேபோன்று 2019-ஆம் ஆண்டுதான் ராமர் கோயில் அமைக்க சரியான நேரம் மற்றும் கடைசி வாய்ப்பாகும். பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போரை தேசத்தின் மக்கள் எப்போதும் மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.