குஜராத் கலவரம்: பில்கிஸ் பானுவுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, அரசு வேலை, வீடு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்பவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்த வழக்கில், அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, அரசு வேலை, தங்கும் வசதி ஆகியவற்றை செய்து கொடுக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









