ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்பெற வைக்கும் தைரியமான முடிவு: எல்.கே.அத்வானி

நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்பெற வைக்கும் தைரியமான முடிவு என பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார். 

News image
Updated On :5 ஆகஸ்ட் 2019, 12:54 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பாணை குடியரசுத் தலைவர் கையெழுத்துடன் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதனை அறிவித்தார். 

இந்நிலையில், 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்பெற வைக்கும் தைரியமான முடிவு என பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான மத்திய அரசின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது. இது நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்பெற வைக்கும் தைரியமான முடிவாகும். 

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் அமைதி, வளம், வளர்ச்சி ஏற்பட பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.