கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கேரளாவில் கனமழை: பம்பை நதியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு

கேரளாவில் பெய்து வரும் தென் மேற்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாக பம்பை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2019, 8:54 am

DIN

கேரளாவில் பெய்து வரும் தென் மேற்குப் பருவ மழையின் தீவிரம் காரணமாக பம்பை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்த ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியைக் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Story image

கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் இம்மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

Story image

கன மழை எச்சரிக்கை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கி, குமுளி, முல்லைப் பெரியாறு பகுதிகளிலும் நேற்று கன மழை பதிவாகியுள்ளது.

Story image

ஆர்ப்பரித்துச் செல்லும் பம்பை ஆற்று வெள்ளத்தால் சபரிமலை ஐயப்பனைக் காண வந்த பக்தர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். மாதாந்திர பூஜையில் கலந்துகொண்டுவிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் பெரும்பாலான பக்தர்கள் தவித்து வருகின்றனர். பம்பையில் இருந்து அருகில் உள்ள முக்கிய ஊர்களுக்குச் செல்லும் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால், போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஆலப்புழா - எர்ணாகுளம் இடையேயான தண்டவாளப் பகுதியில் மரங்கள் விழுந்ததால் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ரயில்கள் அனைத்தும் கோட்டயம் வழியாக திருப்பி அனுப்பப்பட்டது. 

இடுக்கி அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. புதன்கிழமையன்று அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் 71.20 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

Story image

ரெட் அலர்ட்: 

இதற்கிடையே, வியாழக்கிழமையன்று திரிசூர், பாலக்காடு, வயநாடு, கன்னூர், காசர்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, காசர்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அல்ர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இடுக்கி மற்றும் கோழிக்கோடு பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.