ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

லடாக்கில் ராணுவ வீரர்களோடு சுதந்திர தினம் கொண்டாடிய 'தல' தோனி!

ஜம்மு காஷ்மீரில் ராணுவப் பயிற்சி பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி இன்று லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடினார். 

News image
Updated On :15 ஆகஸ்ட் 2019, 9:31 am

ஜம்மு காஷ்மீரில் ராணுவப் பயிற்சி பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி இன்று லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் சுதந்திர தினத்தை கொண்டாடினார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி,  ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ளார். உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடருக்குப் பின்னர்,  அவர் 2 மாதங்களுக்கு ஜம்மு காஷ்மீரில் ராணுவப்  பயிற்சிக்காக சென்றுள்ளார். கடந்த ஜூலை 31ம் தேதி சென்ற அவர், ஆகஸ்ட் 15ம் தேதி வரை காஷ்மீரில் தங்கி, பாராசூட் ரெஜிமண்டில் பயிற்சி பெற்று வருகிறார். 106 டெரிட்டோரியல் ஆர்மி பட்டாலியன் குழுவினருடன் இணைந்து அவர் பணியாற்றி வருகிறார். ராணுவ வீரர்களுடன் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில், இன்று நாட்டின் 73வது சுதந்திர தினத்தையொட்டி, தோனி நேற்று லடாக்கிற்கு வந்தார். அங்குள்ள ராணுவ அதிகாரிகள், அவருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ராணுவ வீரர்களோடு அவர் கலந்துரையாடினார். 

அதன் தொடர்ச்சியாக, லடாக்கில் உள்ள ராணுவ மருத்துவனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அங்கு சிகிச்சை பெறும் வீரர்கள் மற்றும் மக்களுடன் கலந்துரையாடினார். 

இன்று லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் அவர் சுதந்திர தினத்தை கொண்டாடினார். 

முன்னதாக, ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, ஜம்மு காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை அல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.