ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை: சிதம்பரம் விளக்கம்

மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் நான், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை என்று சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை: சிதம்பரம் விளக்கம்
Published on
Updated on
1 min read

மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் நான், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தப்பி ஓட வேண்டிய அவசியம் இல்லை என்று சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவரைக் கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

கடந்த 17 மணி நேரத்தில் சிதம்பரம் வீட்டுக்கு இரு துறை அதிகாரிகளும் 4 முறை வருகை தந்துள்ளனர். ஆனால், வீட்டில் இருப்பவர்கள், சிதம்பரம் எங்கிருக்கிறார் என்று தெரியாது என பதில் அளித்ததால், அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில், சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மேல்முறையீட்டு மனுவில், மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் தான், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தப்பிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. எம்.பி.யாக உள்ள எனது மீது கடந்த காலங்களில் எந்த ஊழல் வழக்குகளும் இல்லை. நீதியின் முன், தப்பிச் செல்ல, சாட்சியங்களை கலைக்க முயற்சி செய்ததாக என்னை குற்றஞ்சாட்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் இடம்பெறாத நிலையில், முன் ஜாமீன் மனு மறுக்கப்பட்டது ஏன்?

சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானதையும் முன் ஜாமீன் மனுவில் சிதம்பரம் தரப்பில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com