காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வீரர்கள் கடும் துப்பாக்கிச்சூடு: 4 வீரர்கள் வீரமரணம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளிடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் மேஜர் உட்பட 4
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வீரர்கள் கடும் துப்பாக்கிச்சூடு: 4 வீரர்கள் வீரமரணம்!
Published on
Updated on
1 min read


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளிடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் மேஜர் உட்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் கடந்த வியாழக்கிழமை (பிப்.14) தாக்குதல் நடத்தினார். வெடிபொருள் நிரப்பப்பட்ட வாகனத்துடன் வந்து, சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதி வெடிக்க செய்தார். இதில் பேருந்தில் சென்ற சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கு தக்க நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அரசு தெரிவித்தது. 

இந்த நிலையில், தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து விரைந்து வந்த 55 ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தை சுற்றி வளைத்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் 2 முதல் 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்திருப்பதாகவும், அவர்கள் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் முதல்கட்ட தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், புல்வாமாவின் பிங்லான் பகுதியில் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்து வீரர்கள் தாக்கியபோது இருதரப்புக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் மேஜர் உட்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஒரு வீரர் காயமடைந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com